சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சித் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.  

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் தான் மதிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார் என, பிரதமர் அலுவலகம் அறிவித்திருக்கும் நிலையில், கட்சித்தலைவர்கள் இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இதேவேளை, மக்கள் எதிர்ப்பு காரணமாக  கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.