இன்று முதல் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

திருகோணமலையில் உள்ள எரிபொருள் விநியோக முனையத்திலிருந்து எரிபொருட்கள் நாடளாவிய ரீதியில் உள்ள லங்கா ஐஓசி நிரப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும்.

அதற்காக திருகோணமலை முனையம் 24 மணி நேரமும் செயற்படும் என்று லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.