இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்தவர்களால் 1,78,50,000 ரூபா பணம் நேற்று (10) கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பணத்தைக் கண்டுபிடித்த மக்களும் இணைந்து கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் அதனை கையளித்துள்ளனர்.

இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு நாளை அறிவிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (09) முதல் கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.