பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவேண்டிய அவசியமில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைவாக இவ்வாறான சூழ்நிலையில் பிரதமர் பதவி விலக தேவையில்லை எனவும், ஊடகங்கள் வழங்கிய பிழையான தகவல்களினால் ஏற்பட்ட குழப்ப நிலையாலுமே பிரதமர் அவ்வாறு அறிவித்தார் என வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.

அரசியலமைப்பு பின்பற்றபப்ட்ட வேண்டுமெனவும், பிரதமர் பதவி விலகவேண்டுமென அரசியலமைப்பில் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ள அவர், 13 ஆம் திகதி ஜனாதிபதி பதவி விலகினாலும் அரசாங்கம் தொடர்ந்தும் செல்வதில் எந்த சிக்கல்களும் இல்லையென மேலும் தெரிவித்துள்ளார்.