ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ தகவல்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவுக்கு மட்டுமே அறிவிக்கப்படுமென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் ஜனாதிபதி தனது பதவி விலகலை பிரதமருக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி செயலக அறிவிப்பு காலையில் வெளியான அறிவிப்பில் குழப்ப நிலையை தோற்றுவித்துள்ளது.

‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் சபாநாயகரால் வெளியிடப்படும். எனவேஇ சபாநாயகர் வெளியிடும் அறிவிப்புகளை மாத்திரம் ஜனாதிபதி அவர்களால் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளாகக் கருத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என ஜனாதிபதி அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.