இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் சர் எட் டேவி பிரித்தானிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அரசின் ஊழல், வரி குறைப்பு, உயரும் பாதுகாப்பு செலவுகள் மற்றும் கொடூரமான பொலிஸ் அதிகாரங்கள் ஆகியவற்றால் இலங்கையில் பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.

இலங்கையில் உள்ள ஜனநாயகவாதிகளை ஆதரிப்பதற்காக ஒரு முழுமையான பொருளாதார மற்றும் அரசியல் தீர்விற்காக ஐக்கிய இராச்சியம் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று டேவி பரிந்துரைத்தார்.

மேலும், தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் உட்பட நாட்டிலுள்ள அனைவரினதும் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.