கொழும்பு – காலிமுகத்திடலில் பதிவாகிய சம்பவத்தை கண்டித்து புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அமைதியான முறையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.