கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய ஒருவர்
தெமட்டகொடை பகுதியில் நேற்று(17) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 125 கையடக்கத் தொலைபேசிகள் பாகங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனைத்தவிர 10 மடிக்கணினிகள், 520 கைக்கடிகாரங்கள், 3 தொலைக்காட்சிகள், 1 பியானோ, 1 கிட்டார் மற்றும் கைக்குண்டு ஆகியன சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.