எரிபொருட்கள் விலையை நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. ஒரு லீட்டர் டீசலின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. ஒரு லீட்டர் டீசலின் புதிய விலையாக 430 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 25 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி புதிய விலை 365 ரூபாவாகும். பெற்றோல் விலையில் மாற்றம் இல்லை.