இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்து நீதிப் பேராணை (ரிட்) உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என்றும் நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் அவ்வாறானவர் எம்.பி பதவியை வகிக்க தகுதியற்றவர் எனவும் அது சட்டத்துக்கு முரணானது எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.