” படையினரை களமிறக்கியும், அவசரகால சட்டத்தை பயன்படுத்தியும் மக்கள் போராட்டம் ஒடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. ஜனநாயக வழியிலான மக்கள் போராட்டங்களுக்கு நாம் தலைமைத்துவம் வழங்குவோம். அதனை யாராலும் தடுக்க முடியாது.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” போராட்டம் என்ற போர்வையில் எவராவது வன்முறையில் ஈடுபட்டாலோ அல்லது அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தாலோ , வீடுகளை கொளுத்தினாலோ அவற்றுக்கு எதிராக சட்டங்களை பயன்படுத்துங்கள். அத்தகைய நபர்களுக்கு எதிராக படையினர் தமது பணிகளை முன்னெடுக்கலாம்.

ஆனால் ஊழல் மோசடிகளுக்கு எதிராகவும், நாட்டை சீரழித்த இந்த அரசாங்கத்துக்கு எதிராகவும் அறவழியில் நாட்டு மக்கள் போராடுவதை எவராலும் தடுக்க முடியாது. தடுப்பதற்கு நாம் இடமளிக்கவும் மாட்டோம். எனவே, போராட்டத்தை குழப்பிக்கொள்ள வேண்டாம். ” – என்றார்.