இணுவில் கிழக்கு பகுதியில் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் இரண்டு வாள்களுடன் இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் 51ஆவது படைப்பிரிவில் ராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்றைய தினம் இராணுவப் புலனாய்வு பிரிவினர் மற்றும் சுன்னாக பொலிசார் இணைந்து நடாத்திய தேடுதலின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக சுன்னாகம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.