உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்குவதற்கு  ஆதிவாசிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் சுயாதீனமாக போட்டியிடுவதா அல்லது தமது பிரதிநிதிகளை கட்சிகளின் சார்பில் களமிறங்குவதா என்பது தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் முடிவெடுத்த பின்னர், அது தொடர்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

அதேவேளை, ஆதிவாசிகளின் சார்பில் அரசியல் கட்சியொன்றை பதிவுசெய்வதற்கான நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது.