தனது வெளிநாட்டுப் பயணங்களுக்காக 70 மில்லியன் ரூபாய் செலவழித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) மறுத்துள்ளார்.

அனைத்து வெளிநாட்டுப் பயணங்களுக்கும் 3.37 மில்லியன் ரூபாய் மட்டுமே தான் செலவழித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் சீன பயணம்

தனது இந்தியா மற்றும் சீன பயணங்களுக்கு அந்த நாடுகளே ஆதரவளித்ததாகக் கூறிய அவர், தென் கொரியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, சுவீடன், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுக்கான பயணங்களுக்கு மட்டுமே தான் செலவழித்ததாகவும் கூறியுள்ளார்.

anura-kumara-denied-allegations-against-him-

மேலும், இதற்காக செலவழிக்கப்பட்ட அனைத்து பணமும் அந்த நாடுகளில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கிளைகளைச் சேர்ந்தவர்களால் செலவழிக்கப்பட்டதாகவும் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.