( பூமுதீன்)இன்று முகா உயர் பீடக் கூட்டம் கொழும்பில் நடைபெறவிருந்த வேளையில் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.முகா தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன் மற்றும் முகா தலைவர் ரவூப் ஹக்கீமின் சகோதர் ஹசீர் ஆகியோருக்கு வேண்டப்பட்ட கொழும்பைச் சேர்ந்த பலர் – கூட்டம் இடம்பெறும் இடத்துக்கு வந்து பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

முகா எம்பீக்களான தௌபீக் மற்றும் பைசால் காசீம் ஆகியோர் கூட்டத்துக்கு வந்த போதே இந்த பிரளயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.” மட்டக்களப்பான் வெளியேறு , உங்கள் ஆதிக்கம் அஷ்ரபோடு முடிந்து விட்டது , உங்கள் மனைவிமார் எங்கே ; கோட்டாவுக்கு – உங்கள் மனைவிமாரை கூட்டிக் கொடு ” போன்ற கேவலம் கெட்ட வசனங்கள் – அங்கு பாவிக்கப்பட்டு – அந்த எம்பீக்களை தாக்குமளவுக்கு நிலைமை சென்றுள்ளது.இதனிடையே – கட்சியின் , கிழக்கு மாகாண உயர்பீட உறுப்பினர்கள் செய்வதறியாது , கூட்ட மண்டபத்திற்குள் அச்சத்துடன் இருப்பதாக அறியக் கிடைக்கின்றது.” தலைவர் அமைதியாக இருக்கிறார்.

எங்களை கொழும்பைச் சேர்ந்தவர்கள் கேவலமாக வசைபாடுவதாக” உயர்பீட உறுப்பினர் கவலையோடும் அதிர்ச்சியாகவும் இந்த தகவலை தெரிவித்தார்.பின்னர் – தலைவர் ரவூப் ஹக்கீம் – 4 எம்பீக்களையும் கூட்டத்துக்கு அழைப்பதில் முயற்சித்து வருகிறார் என்றும் சுட்டிக்காட்டினார்.