கொரோனா தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளடங்கிய 10 ஆயிரம் பெறுமதியான நிவாரண பொதியை மட்டுப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் நிவாரண பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனூடாக அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற தன்மையை விளங்கிக் கொள்ள முடிகிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு மூடப்பட்ட பல நாடுகள் தங்கள் மக்களின் வாழ்க்கையை நிலையை அறிந்து நிவாரணப் பொதிகளை வழங்கியுள்ளன.

ஆனால் இலங்கையில் நடப்பது என்னவென்றால் எங்கள் செல்வாக்கின் காரணமாக மக்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணப் பொதி கூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களும் தியாகம் செய்ய வேண்டும். என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் தொடங்கிய நாளிலிருந்து மக்கள் செய்த தியாகங்களை அரசாங்கம் பார்க்கவில்லை என்பது போலவும் தெரியாது என்பது போலவும் இருப்பதை நம்பமுடியாதுள்ளது.

மக்களை தியாகம் செய்யுமாறு கேட்கும் அரசாங்கமே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியுள்ளது.

மக்களை தியாகம் செய்யுமாறு கோரும் அரசாங்கமே உணவு செலவளிப்பின் ஆற்றலில் உலகில் மிகவும் வறிய ஐந்தாவது இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. நாட்டு மக்கள் தங்களின் ஊதியத்தில் 66 சதவீதத்தை உணவிற்காக செலவழிக்கும் நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

செல்வந்தர்களுக்கு வரிச்சலுகை அளித்து நாட்டிற்கு 600 மில்லியன் ரூபாய் வருவாய் பறிபோக காரணமாக இருந்த இந்த மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.

ஒரு நாளைக்கு மூன்று வேளை போக ஒரு வேளை உணவை கூடஉண்ணாமல் பெருமூச்சு விடும் நூறாயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் தியாகம் செய்யுமாறு மக்களிடம் கேட்பதை விட பெரிய கோரிக்கை எதுவும் இல்லை.

கொரோனா பேரழிவின் மத்தியில் வாழ்க்கைக்கும் இறப்புக்கும் மத்தியில் போராடும் மக்களின் நிவாரணத் பொதிக்கும் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் இந்த அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற தன்மையினை உணர்ந்துக் கொள்ள முடிகிறது. என்றார்.