தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு ஈரானிய பிரஜைகள் சுத்திகரிப்பான் திரவங்களை அருந்தியதனால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சுத்திகரிப்பான் திரவங்களை அருந்திய மேலும் பத்து ஈரானிய கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதானவர்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களே இவ்வாறு சுத்திரிகப்பான் திரவத்தை அருந்தியுள்ளனர்.