தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் (Athuraliye Rathana Thero), எமது மக்கள் சக்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அந்த கட்சியின் அரசியல் சபை மற்றும் மத்திய செயற்குழு என்பன இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.

அத்துரலியே ரத்தன தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுக்களுக்கு அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் இந்த தீர்மானம் குறித்த கடிதம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

எமது மக்கள் சக்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அத்துரலியே ரதன தேரரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குமாறு அந்த கட்சி, தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.