சேனநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய பரம்பரையைப் போன்று ராஜபக்சர்களின் அரசியல் இருப்பும் விரைவில் நிறைவிற்கு வரும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் (Muruththettuwe Ananda Thero) தெரிவித்துள்ளார்.

தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் அரசாங்கமும் அழிவடையும், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய நாங்களும் அழிவடைவோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அபயராம விகாரையில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.