இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஆகியோர்களுக்காக  வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நத்தார் தின விசேட சந்திப்பு மற்றும் விருந்துபசாரம் நேற்று இரவு கொழும்பில் உள்ள ஷங்கிலா ஹோட்டலில் இடம்பெற்றது.

நத்தார் தின விசேட நிகழ்வின் பிரதம அதிதிகளாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பிரதமருடன் கலந்துரையாடினார்கள்.

குறித்த நிகழ்வில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், அமைச்சர்களான அலிசப்ரி, நிமல் சிறிபாலடி சில்வா, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோரும் இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், தாரக பாலசூரிய ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களான  ஜயந்த வீரசிங்க, சுரேன் ராகவன் மற்றும் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.