நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இன்றிரவு அமெரிக்கா புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட பயணமாக அமைச்சர் பசில் இவ்வாறு அமெரிக்கா புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

அமெரிக்க மற்றும் இலங்கை குடியுரிமை கொண்டவரான நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் பிள்ளைகள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக நேற்று சிங்கப்பூர் சென்றார்.