ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில், கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் மகன் உட்பட 6 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (03) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராகம வைத்திய பீட மாணவர்கள் சிலர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.