By. Alex Lantier, Johannes Stern
ரஷ்யப் படைகள் உக்ரேன் இலக்குகள் மீது குண்டுவீசி, உக்ரேனிய துருப்புக்கள் மற்றும் நாட்டின் கிழக்கில் உள்ள அதிவலது ஆயுதக் குழுக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) ரஷ்யா மீது ‘மிகப் பாரியளவில், மிகவும் வலுவான’ பொருளாதாரத் தடைகளை விதிக்க ஒப்புக்கொண்டதாக வியாழன் இரவு பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன் அறிவித்தார். கூடுதலாக 7,000 அமெரிக்க துருப்புக்களை வாஷிங்டன் ஜேர்மனிக்கு அனுப்பிய நிலையில் இது நடந்தது, ரஷ்யா மற்றும் உக்ரேனின் மேற்கு எல்லைகள் முழுவதும் நேட்டோ கூட்டணி அதன் படைகளைக் கட்டமைத்துள்ளது.