பஸில் ராஜபக்சவை பாராளுமன்றத்தில் இன்று ‘கப்புடா’ (காகம்) என விமர்சித்த விமல் வீரவன்ச, அந்த கப்புடாவால் சிவப்பு சாலை அணிந்துகொண்டு ராஜபக்சக்களால் இன்று வீதியில் செல்ல முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

அதனால்தான் இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றம் வருவதை அன்றே நாம் எதிர்த்தோம் எனவும் விமல் குறிப்பிட்டார்.

நாட்டையும், பொருளாதாரத்தையும் கப்புடா சீரழித்தது. அந்த கர்மவினைதான் ஏனைய அமைச்சர்களையும் பாதித்துள்ளது. இன்று பின்வரிசையில் அமரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.