பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போா் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படுத்துபவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் பாதுகாப்பு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள காவல்துறையினா் கலவரங்களில் மேல் மாகாணத்தில் 6 பேரும் தென் மாகாணத்தில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்

68 வீடுகள் மற்றும் 47 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் 65 வீடுகள் மற்றும் 41 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.