வன்முறைச் சம்பவங்களை தூண்டி நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தப்படலாமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

நீதிக்காகவும், ஜனநாயக ஆட்சிக்காகவும் அமைதியான முறையில் அற்புதமான போராட்டத்தை நடத்தி வரும் அனைவரிடம் தான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன் எனத் தொிவித்த அவா் வன்முறைச் சம்பவங்களை தூண்டி நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாம் எனத் தெரிவித்துள்ள அவா் நிறுவனத் திறமைகளை பயன்படுத்த வேண்டுமெனவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.