ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகிய பின்னரும் போராட்டத்தைக் கைவிடக் கூடாது என்று கூறியுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) புதிய அரசாணையுடன் புதிய ஆட்சி அமைக்கும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என இன்று தெரிவித்தார்.

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா செய்தியாளர் மாநாட்டில் பேசுகையில், இந்தப் போராட்டத்தின் நோக்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி நீக்கம் செய்வது மாத்திரமல்ல, 74 ஆண்டுகால தோல்வியடைந்த பொருளாதாரத்தை மாற்றியமைத்து முறைமை (சிஸ்டம்) மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று தெரிவித்தார். 

 தற்போதைய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்கு ஜனாதிபதி பதவி விலகிய பின்னரும் தீர்வு கிடைக்காது என தெரிவித்த அவர், இந்த நெருக்கடி நிலையை தீர்க்க புதிய அரசாணையுடன் கூடிய புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

சில தரப்பினர் நிலைமையை சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றனர். தற்போதைய நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமித்து நாட்டை ஆள முயற்சிக்கின்றனர். இதுபோன்ற தந்திரங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறோம். எம்மால் சாதிக்க முடியும். புதிய அரசாங்கத்தை அமைத்த பின்னரே இறுதி வெற்றி.இப்போதும் பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் தற்போதைய பாராளுமன்றத்தின் மூலம் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.நாம் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும். குறுகிய கால அவகாசம் மற்றும் அதன் முதல் பணி தேர்தலை நடத்துவதாக இருக்க வேண்டும், என்றார்.

 ஜனாதிபதி தனது ஆணை தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பதை உணர்ந்ததன் காரணமாகவே தனது பதவி விலகலை அறிவிக்க நேரிட்டதாகத் தெரிவித்தார்.

 “நாடாளுமன்றம் இப்போது செல்லாது. இந்த நெருக்கடியை தீர்க்கும் திறன் இந்த பாராளுமன்றத்திற்கு இல்லை. இந்த பாராளுமன்றம் இப்போது நெருக்கடியை தீர்ப்பது நெறிமுறை மற்றும் ஜனநாயகம் அல்ல, ”என்று அவர் கூறினார்.