ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மனைவியுடன் சிங்கப்பூர் சென்றடைந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் சங்கி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள விஐபி வளாகத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் தங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அது ஹோட்டல்கள் வெளிநாட்டு தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமையினால் இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் வருகைக்காக சிங்கப்பூர் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் விமான நிலையத்திற்கு சென்று பல மணி நேரம் காத்திருந்ததாக தெரியவந்துள்ளது.