அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹூ கோஷம் எழுப்பினர். பொலிஸாரின் மனிதச் சங்கிலியை உடைக்கும் முயற்சியில் ஈடுபடத் தவறியதற்காக அவரிடம் கோபத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்களின் கேலிக்கு மத்தியில் அந்த இடத்தை விட்டு சஜித் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.