ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கி தந்த செல்போனை வைத்து நிர்வாண புகைப்படங்களை எடுத்து வெளியிட்ட சிறுமி

கொரோனா காலகட்டமான கடந்த இரண்டு வருடங்களாக சிறுவர்இ சிறுமிகள் பல்வேறு பாலியல் குற்றங்களுக்கு உள்ளாக்குபடுவது பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்து வருகிறது. ஆன்லைன் வகுப்பு முறைகள் வந்ததில் இருந்து மாணவர்களின் கைகளில் செல்போன் போனதும்இ அதன் காரணமாக அவர்கள் ஒரு அறைக்குள் தனிமைப்படுத்தப்பட்டதும் இதற்கு முழு காரணம் என்கின்றனர்.

இந்த நிலையில்இ அகமதாபாத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி இன்ஸ்ட்டாகிராமில் தனது நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்துள்ள சம்பவத்தால் அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

15 வயதான அந்த சிறுமிக்கு ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர் தனி அறையும்இ தனி செல்போன் ஒன்றையும் ஒதுக்கியுள்ளனர். அந்த சிறுமி தன்னை பல நேரங்களில் நிர்வாணமாக போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்து வந்துள்ளார். மேலும்இ தனது உறவுக்கார சிறுமியிடமும் இன்ஸ்டாகிராமில் தன்னை பாலோவ் பண்ணவும் கூறியுள்ளார்.

அந்த விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததும் அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையேஇ சிறுமியின் உறவினர்கள் 181 ஹெல்ப்லைனை அழைத்து விஷயத்தை தெரியப்படுத்தி தீர்வு கேட்டுள்ளனர். அவர்கள் சிறுமியிடம் பேசும்போதுஇ சமூக ஊடகத்தில் இப்படி நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டால் சைபர் குற்றமாகும் என கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர்.

அப்போதுஇ சிறுமி இனி தனது பெற்றோருக்கு முன்னால்தான் செல்போனை பயன்படுத்துவேன் என்று உறுதியளித்தார். பின்னர் இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கிவிட்டுஇ மொபைல் போனை படிப்புக்கு மட்டுமே பயன்படுத்துவேன் என்று அவர்களிடம் கூறியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த சிறுமியின் பெற்றோர் உடல்நலம் சரியாகி வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.