நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வேளையில், எவ்வித தடையுமின்றி நத்தார் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக நிதியமைச்சர் அமெரிக்கா சென்றுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘கிராமத்திலிருந்து ஆரம்பிப்போம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த 15ஆம் திகதி தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது டொலர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் துறைமுகத்தில் விடுவிக்க முடியாத கொள்கலன் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் சமையல் அறைகளில் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாவதுடன்,  யுகதனவி ஒப்பந்தம் விவகாரம் உச்சத்தில் இருக்கும் வேளையில் நாட்டின் நிதியமைச்சர் தனிப்பட்ட விடயங்களுக்காக வெளிநாடு செல்வது சரியல்ல என அவர் தெரிவித்துள்ளார்.