அடுத்த 48 மணிநேரத்துக்குள் தெற்கு அரசியலில் திடீர் திருப்பம் ஏற்படக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பாக பேசப்படுகின்றது,

அரசுக்கு ஆதரவு வழங்கிவந்த டலஸ் அழகப்பெரும, பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திவிட்டார். மற்றுமொரு ஆளுங்கட்சி உறுப்பினரான சரித ஹேரத்தும், டலஸின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளார்.

அத்துடன், எதிரணி உறுப்பினர்களை வளைத்துபோடும் அரசின் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகும் முடிவை அறிவிக்கக்கூடும், அவ்வாறு இல்லாவிட்டால் மேலும் சிலர் அரசியிலிருந்து வெளியேறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.