ஐக்கிய மக்கள் சக்தியின் சுமார் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் சிலருக்கு அமைச்சு பதவியும், ஏனைய சிலருக்கு பிரதி அமைச்சு பதவியும் வழங்கப்படலாம் அறியமுடிகின்றது.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டே, ரணிலை ஆதரிக்கும் முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.

அத்துடன், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலரும் புதிய அரசில் இணையவுள்ளனர் .