ரஷ்யாவில் கோடீஸ்வர சுற்றுலாப்பயணிகளின் உடலை கரடிகள் இழுத்துச் சென்று தின்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் கோடீஸ்வரர்கள் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரஷ்யாவின் முன்னாள் விளையாட்டு வீரரும், தற்போது சுற்றுலா ஹெலிகொப்டர் விமானியுமான 25 வயது Igor Malinovskii மற்றும் அவருடன் சென்ற இரு கோடீஸ்வர சுற்றுலாப்பயணிகளுமே சனிக்கிழமை விபத்தில் சிக்கியுள்ளனர்.

இதில் ரஷ்யாவின் பிரபல பெண் தொழிலதிபரான Zoya Kaygorodova மற்றும் பிரபல மொபைல்போன் நிறுவன நிர்வாகி Sergey Kolesnyak ஆகியவர்கள் மரணமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெளியான தகவலையடுத்து விரைந்த மீட்புக்குழுவினர், ஹெலிகொப்டரின் எரிந்த பாகங்களை மட்டுமே மீட்டுள்ளனர். 

விமானி மற்றும் சுற்றுலாப்பயணிகள் இருவரின் உடல்களை அவர்களால் மீட்க முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில், சிதைக்கப்பட்ட மனித உடல் பாகங்களை மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதியில் இருந்து வெளியே மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர்களின் உடல்களை அப்பகுதியில் அதிகமாக காணப்படும் பழுப்பு நிற கரடிகள் தின்றிருக்கலாம் என கூறப்படுகிறது. 

ஹெலிகொப்டர் விபத்து நடந்த பகுதியானது பழுப்பு நிற கரடிகள் அதிகம் வாழும் இடம் எனவும், சுமார் 10,000 முதல் 14,000 கரடிகள் வரையில் அப்பகுதியில் வசிப்பதாக கூறப்படுகிறது.