பாராளுமன்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து பாராளுமன்றத்தை பாதுகாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பாதுகாப்புப் படைத் தளபதிகள், கட்சித் தலைவர்களிடம் உத்தரவு கேட்டனர், ஆனால் கட்சித் தலைவர்களிடமிருந்து இறுதி வார்த்தை வரவில்லை.அப்போது, பாதுகாப்புப் படைத் தளபதிகள், நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று பதில் ஜனாதிபதியிடம் உத்தரவு கேட்டனர்.

இந்நிலையில் பாதுகாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினர் தற்போது போராட்டக்காரர்களை விரட்டியடித்து வருகின்றனர்,மேலும் இரு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர்.